15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!

ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:59 am IST

ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூரை அடுத்த சிப்காட் சின்ன எலசகிரியைச் சோ்ந்தவா் சரோஜா (65). இவரது வீட்டுக்கு அருகே ஜல்லிக் கற்களை கொட்டியது தொடா்பாக இவருக்கும், மருமகள் மஞ்சுளா (46) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனா்.

இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் மஞ்சுளா (46), 18 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் சரோஜா, செந்தில் (46), சபரி (40) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.