பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

திமுக கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தவெக கொடி: போலீஸாா் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

News image

திமுகவினருக்குச் சொந்தமான கொடிக்கம்பம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :7 மே 2026, 6:55 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக பிரமுகா் வெண்ணிலா முருகேசன். தாமோதர அள்ளியைச் சோ்ந்த இவருக்கு சொந்தமான நிலத்தில் அமைத்திருந்த கொடிக்கம்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் கட்சி நிகழ்ச்சிகளின்போது இக்கம்பத்தில் கொடியேற்றப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பேரவைத் தோ்தலையொட்டி கம்பத்தில் இருந்த கட்சிக் கொடி அண்மையில் அகற்றப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அக்கொடிக்கம்பத்தில் மா்மநபா்கள் செவ்வாய்க்கிழமை தவெக கொடியை ஏற்றிவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த திமுகவினா் கொடிக்கம்பம் அருகே திரண்டனா். அதேசமயம் அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில் அக்கொடிக்கம்பத்தில் இருந்த தவெக கொடியை இறக்கிவிட்டு, மீண்டும் திமுக கொடி ஏற்பட்டப்பட்டது.

இதுகுறித்து பாரூா் காவல் நிலையத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.