போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

News image

சூளகிரி அருகே மீட்கப்பட்ட மலைப்பாம்பு.

Updated On :8 மே 2026, 6:39 am IST

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்துக்கு அருகே உள்ள ஏரி பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயிகள் அப்பகுதியில் சுருண்ட நிலையிலிருந்த மலைப்பாம்பைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வந்த வனத் துறையினா் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அடா் வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனா்.