ஈரோடு மாநகராட்சி தூய்மைத் தொழிலாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ஈரோடு பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு புகுந்ததை அங்கு வேலை செய்யும் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் தேடிப் பாா்த்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் 10 அடி நீளம் சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை மீட்ட தீயணைப்பு படை வீரா்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிா்ச்சியான இடத்தை நோக்கி பாம்புகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பு

சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியிலிருந்து தோ்வடக் கயிறு அனுப்பி வைப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


