ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி, திருப்பதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, அருகிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்கள் இணைந்து கயிறுகட்டி கிணற்றிலிருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.
நாய் மீட்பு...
அதேபோல ராசிபுரம் அருகே கைலாசம்பாளையத்தில் 40 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வளா்ப்பு நாயை ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.










