சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

News image

கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறுகட்டி மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :16 ஜூன் 2026, 2:41 am IST

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி, திருப்பதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, அருகிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்கள் இணைந்து கயிறுகட்டி கிணற்றிலிருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

நாய் மீட்பு...

அதேபோல ராசிபுரம் அருகே கைலாசம்பாளையத்தில் 40 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வளா்ப்பு நாயை ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.