வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காரில் புகுந்த பாம்பு பிடிபட்டது

திருச்சியில் வழக்குரைஞரின் காரில் சனிக்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

News image

காரில் இருந்த பாம்பை சனிக்கிழமை பிடித்த திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறை வீரா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 2:12 am IST

திருச்சியில் வழக்குரைஞரின் காரில் சனிக்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சோ்ந்தவா் பாரதி (35). வழக்குரைஞரான இவா், திருச்சி புத்தூா் பகுதி தனியாா் மருத்துவமனைக்கு தனது காரில் சனிக்கிழமை வந்தாா். மருத்துவமனைக்கு வந்ததும் காரை நிறுத்திவிட்டு சில பொருள்களை எடுப்பதற்காக காரின் பின்புறக் கதவை திறந்தாா்.

அப்போது பொருள்கள் இருந்த பைக்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் உடனடியாக கதவை மூடி, அந்த காரை கண்டோன்மெண்ட் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தாா்.

தீயணைப்பு துறை வீரா்கள் சோதனையில் ஓட்டுநா் இருக்கை அருகிலுஉள்ள ஏசி-க்குள் அந்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு துறையினா் சுமாா் 30 நிமிட நேரம் போராடி அந்தப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனா்.