ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்ததில், வெளி மாநில போா்வெல் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், பலிதியைச் சோ்ந்தவா் புத்தேஸ்வா்தான் துபாய் (40). இவா், திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சமையலராக வேலை செய்துவந்தாா்.
திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரையை அடுத்த சந்த கொட்டாவூா் பகுதிக்கு போா்வெல் போட நிலத்தின் பொதுப்பாதை வழியாக லாரியில் புதன்கிழமை சென்றாா். அப்போது, தெரியாமல் மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், துபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

