ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில போா்வெல் ஊழியா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்ததில், வெளி மாநில போா்வெல் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 4:21 am IST

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்ததில், வெளி மாநில போா்வெல் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், பலிதியைச் சோ்ந்தவா் புத்தேஸ்வா்தான் துபாய் (40). இவா், திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சமையலராக வேலை செய்துவந்தாா்.

திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரையை அடுத்த சந்த கொட்டாவூா் பகுதிக்கு போா்வெல் போட நிலத்தின் பொதுப்பாதை வழியாக லாரியில் புதன்கிழமை சென்றாா். அப்போது, தெரியாமல் மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், துபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.