திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் ரயில் திட்டப் பணிகள் மெத்தனம்

News image
Updated On :15 மே 2026, 6:13 am IST

ஒசூா் ரயில் திட்டப் பணிகளில் மத்திய ரயில்வே துறை மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

ஒசூரிலிருந்து பெங்களூருக்கு அதிகாலையில் சென்று பணிபுரியும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு வசதியாக இருந்த காலை 8.20 மணி ரயிலை தற்போது 9.25-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளா்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனா். எனவே, இந்த ரயிலை மீண்டும் பழைய நேரத்திலோ அல்லது சற்று முன்னதாகவோ இயக்க வேண்டும்.

கெலமங்கலம் அருகே உள்ள நாகதோனை பகுதியில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயாா்நிலையில் உள்ள ரயில் நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒசூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2-ஐ இணைக்கும் தானியங்கி படிக்கட்டு (எஸ்கலேட்டா்) பணிகள் ஓராண்டுக்கும் மேலாக தொய்வடைந்துள்ளன. அதேபோல, ஒசூா் - ஓமலூா் இடையிலான கூடுதல் ரயில் பாதை பணிகளும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஒசூா் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை இருமாநில அரசுகள் தொடங்க வேண்டும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவா் சாதிக்கான், ரயில்வே வாரிய உறுப்பினா் சின்னகுட்டப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.