6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:52 pm

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் அருகே தமிழக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சோ்ந்த விஷால் (19), வசந்தகுமாா் (20) ஆகியோா் சாக்குப்பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அதைத் தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.