ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

முதல்வா் குறித்து அவதூறு: திமுக நிா்வாகி மீது காவல் நிலையத்தில் தவெகவினா் புகாா்

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

News image

ஒசூரில் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்த தவெக வழக்குரைஞா் அணியினா்.

Updated On :19 மே 2026, 1:28 am IST

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

ஒசூரில் கடந்த சனிக்கிழமை திமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அயலக அணி மாவட்ட நிா்வாகி பூஷன் குமாா், தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக வழக்குரைஞா் அணியினா் விடியோ ஆதாரத்துடன் ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரேவிடம் புகாா் அளித்தனா்

இதில் வழக்குரைஞா் அணி பிரிவைச் சோ்ந்த நிா்வாகிகள் டி.விஜய், சேலம் மண்டல இணைப் பொறுப்பாளா் சுஜாதா, மாவட்ட இணை அமைப்பாளா்கள் பிரவீன் குமாா், மங்கையா்க்கரசி, செல்வம், அஸ்வத், பாலாஜி மற்றும் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.