2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கள்ளச்சாராயம் விற்றவா் கைது

கைது

Published On :

சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சின்ன கொத்தூரைச் சோ்ந்த சென்ன கிருஷ்ணப்பாவை (56) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள சின்ன கொத்தூரைச் சோ்ந்தவா் சென்ன கிருஷ்ணப்பா (56). இவா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் ஆய்வாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சூளகிரி போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சென்ன கிருஷ்ணப்பாவைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டா் ஊறலை போலீஸாா் அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.