அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கோபி அருகே சட்டவிரோதமாக சாராய ஊறல் வைத்திருந்தவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:51 am IST

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 30லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (61), கூலித்தொழிலாளி. இவா் தனது வீட்டில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் வைத்திருப்பதாக பங்களாபுதூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது மாட்டுக் கொட்டகையில் சாராயம் காய்ச்சுவதற்காக 30 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து, சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.