முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மீண்டும் பணி வழங்கக் கோரி புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் பணி வழங்கக் கோரி, புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:12 am IST

மீண்டும் பணி வழங்கக் கோரி, புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பேபிபிரிசில்லா,  செயலர் கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா வரவேற்றார். 
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். 12 ஆண்டு அனுபவத்தை கணக்கில் வைத்து டிஎன்ஆர்டிபி திட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும். 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் வேலையில்லாமல் இருக்கும் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர். செயற்குழு உறுப்பினர் சுதாமணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.