காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்தக் கொடூர செயலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எம். ஷேக் நவீத் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ. சித்திக், முன்னாள் மாவட்ட தலைவர்வர்கள் பாச்சல் சீனிவாசன், டாக்டர் ரா. செழியன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி, மகளிர் காங்கிரஸ் செயலர் மகேஸ்வரி, துணைத் தலைவர் புஷ்பவள்ளி, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்கம், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, நாமக்கல் நகரச் செயலாளர் தாமு, ஜெயலட்சுமி, டாக்டர் பாலாஜி, ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்பங்கேற்றனர்.
வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் கமலா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல் மாதா ஆலயத்தில் அசன விழா

டி.ஐ.ஜி, எஸ்.பி.க்கள் சென்னைக்கு இடமாற்றம்

சிக்கன நடவடிக்கையில் தவெக அமைச்சா்கள்!
சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
