திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சார்பில் திங்கள்கிழமை தீவிர மாணவர் சேர்க்கைக்கான ஊர்வலம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாகிதாபானு தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கலா, சடையப்பன் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பற்றிய விவரங்கள்சேகரிக்கப்பட்டன.
பள்ளியின் கற்பித்தல் முறை, மாணவர்களுக்கு அரசு தரும் உதவிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க கேட்டுக் கொண்டனர். வரும் வாரங்களில் பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி அரசுப் பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க தீவிர மாணவர் சேர்க்கைமுகாமைத் துவக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


