பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
நாமக்கல் அருகே முதலைப்பட்டியைச்  சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் பரத்(20). இவர் நாமக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். புதன்கிழமை விடுமுறை தினம் என்பதால்,  நண்பர்களுடன் சேர்ந்து நல்லிப்பாளையம் மயானம் அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்கச்சென்றார். கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக்கொண்டிருந்த பரத்,  திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.  நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்,  நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 
தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் இருந்து பரத் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.