விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வீடு புகுந்து நகை, வாகனங்களை திருடிய 2 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:53 am IST

நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடந்த 12-ஆம் தேதி மோகனூர் அருகே லத்துவாடியில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நாமக்கல், நந்தவனத் தெருவில், இறைச்சி கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
அக்டோபர் 20-ஆம் தேதி, கடந்த 2-ஆம் தேதி, 15-ஆம் தேதிகளில் இருசக்கர வாகனம்ஸ நகைகள் பல்வேறு இடங்களில் திருடப்பட்டது. இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பரமத்தி சாலை, போதுப்பட்டி பிரிவு சாலை அருகே போலீஸார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது  ராமநாதபுரம் மாவட்டம் திலீப்குமார் (23),  திண்டுக்கல் மாவட்டம்  பாலமுருகன்(37) ஆகியோர் போலீஸாரைக் கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள 33.50 பவுன் தங்க நகைள், ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்ளும் கைப்பற்றப்பட்டன. 
இந்த வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.