மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரம் புதைகுழி திட்டம்: விரைந்து முடித்திடக் கோரி நூதன போராட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடந்து வரும் புதைக்குழி சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென

News image
Updated On :14 மே 2018, 9:11 pm

DIN

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடந்து வரும் புதைக்குழி சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பாக கழுதை உருவப்படத்திடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடந்தது.
ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பணிகள் நடந்துவருகின்றன. இப் பணிகள் நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவதால், நகரில் விபத்துகள், வாகன நெரிசல்கள் அதிக அளவில் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆங்காங்கே நடந்து வரும் இந்தப் பணிகளால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை விரைந்து நடத்தி முடித்திட பல்வேறு சமூக அமைப்புகள் ராசிபுரம் நகராட்சியிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ராசிபுரம் மக்கள் நலக் குழு சார்பில் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழுதை படத்திடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மக்கள் நலக் குழுத் தலைவர் ஆ.நீலவானத்து நிலவன் தலைமை வகித்தார். எல்.கே.ராஜேந்திரன் வரவேற்றார். ந.பழனிசாமி, ச.கார்த்திகேயன், சபரிபாலுசாமி, து.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலர் எஸ்.மணிமாறன் போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் நல்வினை செல்வன் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். ஆதி தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலர் செல்வ வில்லாளன், சி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.