கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தீபாவளிப் பண்டிகை: மக்கள் கூட்டத்தால் திணறியநாமக்கல் நகரம்

தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஜவுளி, பட்டாசு போன்ற

Updated On :5 நவம்பர் 2018, 8:57 am IST

தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் கூட்டத்தால் நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறியது. 
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க நாமக்கல்லுக்கு வந்ததால் கடைவீதி, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.  இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மேலும் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் தற்காலிக கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
மேலும், நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டதால் பேருந்துகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.