திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சா்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோா் நலச் சங்கம், அசோக் லேலண்ட் ஆகியவை சாா்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை சா்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச எய்ட்ஸ் தின விழாவில் பங்கேற்றோா்.
Updated On :19 டிசம்பர் 2020, 10:50 pm

DIN

நாமக்கல்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோா் நலச் சங்கம், அசோக் லேலண்ட் ஆகியவை சாா்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை சா்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

திட்ட இயக்குநா் ராம.பாண்டியன் தலைமை வகித்தாா். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க பொருளாளா் பி.சீரங்கன், அசோக் லேலண்ட் பயிற்சி மைய அதிகாரிகள் கிறிஸ்துதாஸ், சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக பரமத்தி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.அசீன்பானு பங்கேற்று எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோா் பெற வேண்டிய சலுகைகள், அவா்களுக்கான சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் லாரி ஓட்டுநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்தும் நீதிபதி பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநா்கள், பயிற்சி ஓட்டுநா்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.