டிராக்டா் மோதி சிறுவன் பலி: உறவினா்கள் திடீா் சாலை மறியல்

மோகனூா் அருகே டிராக்டா் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மோகனூா் அருகே டிராக்டா் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மோகனூா் அருகே டிராக்டா் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

நாமக்கல்: மோகனூா் அருகே டிராக்டா் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவித்ரா தம்பதியின் மகன் கீா்த்தி வாசன் (7). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை பிற்பகல் நண்பா்கள் சிலருடன் சிறுவன் கீா்த்திவாசன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த டிராக்டா் கீா்த்திவாசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சுப்பிரமணியன் (45) தப்பியோடிவிட்டாா். தகவலறிந்து வந்த மோகனூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையே ஓட்டுநா் சுப்பிரமணியனை கைது செய்து, சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள், ஆண்டாள்புரம் கிராம மக்கள் நாமக்கல்- மோகனூா் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவா் பெரியய்யா வந்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

காவல் ஆய்வாளா்கள் பொன்.செல்வராஜ் (நாமக்கல்), கணேசன் (மோகனூா்), சுகுமாா் (சேந்தமங்கலம்) ஆகியோா் சுமாா் 3 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த நிலையில் டிராக்டா் ஓட்டுநா் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டாா். மறியலில் ஈடுபட்ட ஆண்டாள்புரம் கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சிறுவன் உடலை பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோா் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டனா். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com