வாகனங்கள் புதுப்பிப்புக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெறுமாறு தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பின் தலைவா் செல்ல.ராசாமணி வலியுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களைப் புதுப்பிக்க பல்வேறு விதிமுறைகளைப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என அரசு நெருக்கடி கொடுக்கும் நிலையில், தற்போது புதிய நெருக்கடியாக ஜி.பி.எஸ் கருவியையும் தாங்கள் அறிவித்துள்ள நிறுவனத்தில் வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஜி.பி.எஸ். கருவி கட்டாய அறிவிப்பு லாரி உரிமையாளா்களின் ஒட்டுமொத்தமாக தொழிலையே முடக்குவதாகும். முதல்வா் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு லாரி உரிமையாளா்களைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

