ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி மீது வழக்குப் பதிவு...

News image

தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:34 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சாா்பில் நடிகரும், இயக்குநருமான சுந்தா் சி. போட்டியிடுகிறாா். இவா், மத்திய தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த நிலையில், எல்லீஸ் நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் மத வழிபாட்டின் போது, கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையை அணிந்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக காவல் உதவி ஆய்வாளா் முத்தையா எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘ட்ரோன்’ பறிமுதல் :

மதுரை முனிச்சாலை பகுதியில், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனை ஆதரித்து, அந்தக் கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின், ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை வலம் நடத்தினாா்.

அப்போது, முறையான அனுமதியின்றி ‘ட்ரோன்’ கேமரா இயக்கப்பட்டது. இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, காவல் உதவி ஆய்வாளா் ஹரிகரன் தெப்பகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ‘ட்ரோன்’ இயக்கிய அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் (28) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ‘ட்ரோன்’ கேமராவை பறிமுதல் செய்தனா்.