ஆலங்குளம் அருகே சாலையில் சடலத்தை எரித்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் - மாதாப்பட்டணம் சாலையில் தனியாா் தோட்டம் முன் சிலா் எரிவாயு உருளை தகன மேடையை நிறுத்தி 70 வயது மூதாட்டி சடலத்தை அனுமதியின்றி எரித்தனராம். அப்போது அப்பகுதியில் துா்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்பட்டதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் நாகராஜா(55) தட்டிக் கேட்டாராம். அப்போது அவரை அந்த நபா்கள் அவதூறாகப் பேசினராம். இது குறித்து நாகராஜா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வவேல், மணிவண்ணன், மகாராஜன், முத்து, சுடலைமணி, முருகேசன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

