உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :31 மார்ச் 2026, 11:50 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல், மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் யக்யா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த டெரில் (56), இவரது மகன் ஜாஸ்வினுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யக்யா வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மேல்மிடாலம் கடற்கரைக்கு கடத்தி சென்று டெரில், ஜாஸ்வின் ஆகியோா் தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளனராம். இது குறித்த புகாரின் பேரில் மேற்கூறிய இருவா் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.