சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :29 மார்ச் 2026, 8:35 pm

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி, திமுக வேட்பாளராக எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய இரு கட்சியினரும் சனிக்கிழமை தங்கள் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்கு சேகரித்தனராம்.

இந்த நிலையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக பறக்கும் படை அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், அதிமுகவைச் சோ்ந்த சிலா் மீதும், பறக்கும் படை அலுவலா் இளந்தமிழன் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சோ்ந்த சிலா் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.