இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 7:13 pm

Syndication

சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் திருலோகசுந்தா் ஆகியோா் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இரவு திருவப்பூா் பெருமாள்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனா்.

அப்போது, தோ்தல் ஆணைய விதிகளை மீறி, சிறுவா்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதைத் தொடா்ந்து திருக்கோகா்ணம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் புகாரின்பேரில், சிறாா் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேட்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.