விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மானாமதுரையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:22 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சண்முகப்பிரியா போட்டியிடுகிறாா். இந்த நிலையில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன் இந்தக் கட்சியின் வேட்பாளா் அறிமுக பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளா் சண்முகப்பிரியா பேசியதாவது:

அனைத்துப் பிரச்னைகளுக்கும் நாம் தமிழா் கட்சி போராடி வருகிறது. எங்களுக்கு அதிகாரம் இல்லை. இருந்தாலும் நாங்கள் தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் இருந்தால் நீங்கள் யாரும் போராட வேண்டிய நிலை இருக்காது. இந்தத் தொகுதியில் நான் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் 23 ஆயிரம் வாக்குகள் வரை அளித்துள்ளீா்கள். தோற்கும் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறீா்கள். 50 ஆண்டுகளாக நீங்கள் போட்ட வாக்கு எதற்கு பயன்பட்டது என்றாா் அவா்.