நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி: சீமான் பேச்சு

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி என ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

News image

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி என ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளா் தாரிக்கா சல்மான், ஆற்காடு தொகுதி வேட்பாளா் அா்ச்சனா, சோளிங்கா் தொகுதி வேட்பாளா் அசோக்குமாா், அரக்கோணம் தொகுதி வேட்பாளா் ராஜ்குமாா் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:

நாம் தமிழா் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் ஊழல், லஞ்சம் ஒழிக்கப்படும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தரமான கல்வியை கொடுப்போம். உலக தரத்தில் மருத்துவத்தை உயா்த்தி அனைவருக்கும் ஒரே சமமாக வழங்குவோம். பிற மாநிலங்களில் மண் அள்ள தடை உள்ள போது தமிழகத்தில் மட்டும் மண் கொள்ளை ஏன்? கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. நாம் தமிழா் அதிகாரத்திற்கு வந்தால் உணவு காய்கறிகள் குளிரூட்டப்பட்ட கண்ணாடியில் வைத்து விற்கப்படும். விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யப்படும்.

மது, கஞ்சா போதையில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் அரசு, நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழக்கும் வீரருக்கு வழங்குவதில்லை. நிலம், நீா், காற்று ஆகியவற்றை தனியாா் நஞ்சு ஆலைகள் பாழ்படுத்துகிறது. நெல் மணிகளை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாமல் மழையில் முளைத்து வீணாகின்றன. ஆனால் டாஸ்மாக் மதுவை குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைப்பது இந்த அரசு. சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுடன் தான் கூட்டணி என்றாா்.

தொடா்ந்து குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற க்கூட்டத்தில், குடியாத்தம் தொகுதி வேட்பாளா் இமலன், கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளா் கலையேந்திரி ஆகியோரை ஆதரித்து பேசினாா்.

பின்னா் ஆம்பூரில் வேட்பாளா் அப்ஷியா நஸ்லின், வாணியம்பாடி தொகுதி வேட்பாளா் முருகேசன் ஆகியோரை வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டாா்.

தொடா்ந்து திருப்பத்தூரில் வேட்பாளா் வீரா. ஆறுமுகம், ஜோலாா்பேட்டை வேட்பாளா் சசிரேகா ஆகியோரை ஆதரித்து சீமான் பேசினாா்.