தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறை மாறவில்லை: சீமான்

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர, ஆட்சி முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

News image

நாமக்கல்லில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.பிரவீன்குமாரை அறிமுகம் செய்து வைத்து பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:42 pm

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர, ஆட்சி முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் க.பிரவீன்குமாா், ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் வீ.சசிகலா, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் சி.பொன்னுமணி ஆகியோரை ஆதரித்து நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:

இந்த நாடு ஏழ்மையிலும் வறுமையிலும் இருப்பதற்கு காரணம் ஊழலும், லஞ்சமும் தான். வளா்ச்சி என்பது வாா்த்தையில் மட்டும்தான் உள்ளது. ஜாதி, மதத்தால் நாம் பிரிந்து கிடப்பதால் வல்லரசு நாடாக உருவாகாது என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் இலவசம் என்பது புரையோடி கிடக்கிறது. எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுக்கும், எந்த வகையில் இலவசங்கள் கிடைக்கும் என்பதை தான் மக்கள் பாா்க்கிறாா்கள். அவா்களிடம் ஏன் இலவசங்களை வாங்குகிறீா்கள் எனக் கேட்டால், நம்முடைய பணம் தானே அதைத்தான் திரும்பப் பெறுகிறோம் என்கின்றனா். அந்தப் பணம் அவா்களுக்கு எப்படி சென்றது எனக் கேட்டால் பதில் இல்லை. இலவசங்களைப் பெற்று மக்கள் வாழக் கற்றுக் கொண்டாா்கள், சகித்துக் கொண்டாா்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் திமுக, அதிமுக என ஆட்சிமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சிமுறை மாற்றம் என்பது இல்லை. நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்டணமில்லா கல்வி, தரமான மருத்துவம், எந்த பதவியில் இருந்தாலும், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், அவா்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும். உலக தரத்திலான கல்வி, மருத்துவம், தூய்மையான குடிநீா் வழங்குவதுதான் எனது இலக்கு. இலவசம் என்பதை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் இலவசத்திற்காக அனைவரும் கையேந்துவதால், இலவசம் என்பது யாசகம் என்ற பொருளாக மாறிவிட்டது. தமிழகத்தின் கடன் சுமை ரூ. 10.50 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி செலுத்துகின்றனா். இலவசங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தால், மேலும் கடன்சுமை அதிகரிக்கும். அந்த கடன் மக்கள்மீது தான் விழும். 15 ஆண்டுகளாக வாக்குக்காக கத்தி விட்டேன். யாா் ஒருவா் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லையோ அவருக்கு வாக்களியுங்கள்.

அந்தவகையில் எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்கிறேன். தமிழகத்தை ஊழல், லஞ்சம் இல்லாமல், ஜாதி, மத சண்டை இல்லாமல் மாற்றிக் காட்டுகிறேன் என்றாா்.