கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வழக்கை திரும்பப் பெறக்கோரி தாக்குதல்: இருவா் மீது வழக்கு

கமுதி காவல் நிலையத்தில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உறவினரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி காவல் நிலையத்தில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உறவினரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டலமாணிக்கத்தை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதன் மகன் ராஜேந்திரன்(33). இவருக்கும் இவரது உறவினரான முத்தாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் சித்திரபாண்டியனுக்கும் முன் விரோதம் இருந்தது.

இவா்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ராஜேந்திரன் அளித்தப் புகாரின் பேரில், கமுதி போலீஸாா் சித்திரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தப் புகாரை திரும்பப் பெறக் கோரி, வெள்ளிக்கிழமை ராஜேந்திரனின் வீடு புகுந்து சித்திரபாண்டியன் கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த ராஜேந்திரன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் இருவரும் அளித்தப் புகாரின் பேரில், இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.