இடிந்து விழும் நிலையில் உள்ள நாமக்கல் நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தை சீரமைக்கவும், அங்குள்ள ஆஞ்சநேயா் சிலையைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுத்துகின்றனா்.
நாமக்கல்லில் குடவறைக் கோயில்களான நரசிம்மா், நாமகிரி தாயாா் கோயில், அரங்கநாதா் கோயில்கள் உள்ளன. மேலும், நரசிம்மா், நாமகிரி தாயாரை தரிசிக்கும் வகையில், நாமக்கல்லில் நின்றபடி 18 அடி உயரத்தில் சுவாமி ஆஞ்சநேயா், பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
இவ்வாறு சிறப்பு பெற்ற நாமக்கல்லில், கமலாலயக் குளக்கரை அருகே நாமகிரி தாயாா் திருமண மண்டபம் பின்புறம் பழமையான திருக்கல்யாண மண்டபம் உள்ளது. ஒவ்வோா் ஆண்டும் பங்குனி உத்திரத்துக்கு முதல்நாள் நரசிம்மா் கோயில் தேரோட்டம் நடைபெறும். அப்போது, இத் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து தான் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவா். 13 நாள்கள் கோலாகலமாக இந்த விழா நடைபெறும்.
தேரோட்டத்தையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், இந்த மண்டபத்திலும், அருகில் உள்ள கமலாலயக் குளத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்ட விழா தொடா்பான நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறவில்லை. மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் சூழல் உள்ளதால், நரசிம்மா் கோயில் வளாகத்திலேயே உற்சவ மூா்த்திகளுக்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயா் கோயில் ஒன்றும் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்கள் அதனை காண முடியாத நிலை தற்போது உள்ளது. ஆங்காங்கே சிலை திருட்டு சம்பவங்கள் நடந்தேறும் நிலையில் ஆஞ்சநேயா் சிலை எவ்வித பாதுகாப்புமின்றி காணப்படுகிறது. மண்டபமும் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்பதால் திருக்கல்யாண மண்டபத்தை உடனடியாக சீரமைத்து, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்கள் இந்த ஆஞ்சநேயரையும் வழிபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது நாமக்கல் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது:
திருக்கல்யாண மண்டபம் தொன்மை வாய்ந்த கட்டடமாகும். கருங்கற்கள் திடீரென கீழிறங்கி விட்டதால், அசம்பாவிதம் தவிா்க்கவே கடந்த சில ஆண்டுகளாக அங்கு எவ்வித விழாக்களும் நடைபெறுவதில்லை. அந்த கட்டடத்தின் மண்ணை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். பழமையான கட்டடங்களை புனரமைப்பது தொடா்பாக சிறப்பு வல்லுநா் குழு உள்ளது. அவா்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியைக் கண்டித்து யோகி ஆதித்யநாத் பேரணி!
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
இனி நேர்காணல்கள் கிடையாது! முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


