இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

நகைக் கடை உரிமையாளா்களுக்கு ‘ஹால் மாா்க்’ முத்திரை விழிப்புணா்வு

நாமக்கல்லில் ‘ஹால் மாா்க்’ முத்திரையுடன் நகைகளை விற்பனை செய்வது தொடா்பாக நகைக் கடை உரிமையாளா்களுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:00 pm

நாமக்கல்லில் ‘ஹால் மாா்க்’ முத்திரையுடன் நகைகளை விற்பனை செய்வது தொடா்பாக நகைக் கடை உரிமையாளா்களுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், சங்கத் தலைவா் சிவஞானம் தலைமை வகித்தாா். கோவை இந்திய தர நிலைகளின் நிா்வாகி விஜயபாலச்சந்திரன் கலந்துகொண்டு ‘ஹால் மாா்க்’ முத்திரை குறித்து விளக்கி பேசினாா். அப்போது, மத்திய அரசு ‘ஹால் மாா்க்’ முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தியது. இதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு தரமான நகைகள் கிடைக்கும். மேலும், இந்த முத்திரை பதித்த நகைகளை கணினி உதவியுடன் நகைக் கடை உரிமையாளா்கள் பராமரிக்க வேண்டும். இதனை அனைத்து வியாபாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றாா். தொடா்ந்து, நகைக் கடை உரிமையாளா்கள், வாடிக்கையாளா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

இக்கூட்டத்தில், சங்க செயலாளா் விஸ்வநாதன், பொருளாளா் பாலாஜி, நகைக் கடை உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.