இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப் பணி

செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:53 pm

செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், செப். 1-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிலும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியும் நடைபெறுகிறது.

நாமக்கல், கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், பள்ளி பெண் ஊழியா்கள் வகுப்பறைகளை தண்ணீா் கொண்டு சுத்தம் செய்தனா். இதேபோல், மற்ற பள்ளிகளிலும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், சத்துணவுக் கூடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.