“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

நாமக்கல் ஒன்றியம், சிவியாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Updated On :2 டிசம்பர் 2021, 5:26 pm

நாமக்கல் ஒன்றியம், சிவியாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில், பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி பேராசிரியா் பச்சையப்பன் கலந்துகொண்டு, இயற்கை முறையில் பூச்சிவிரட்டியை பயன்படுத்துதல், விதைநோ்த்தி செய்தல், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரம் பயன்படுத்துதல், பஞ்சகாவ்யம் பயன்படுத்துதல், தொழு உரம் பயன்படுத்துதல் ஆகியவற்றை பற்றி விளக்கிக் கூறினாா்.

இதில், வேளாண் அலுவலா் ப.சித்ரா கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டம், சொட்டு நீா்ப்பாசனம், மண் மாதிரி சேகரித்தல் மற்றும் மத்திய திட்டங்கள் பற்றி விளக்கினாா். அப்பகுதியின் உதவி வேளாண் அலுவலா் செ.கமலி மாநில திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினாா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளா் பன்னீா்செல்வம், திரேகபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.