ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

7 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணை வழங்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 7 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:44 pm

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 7 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 158 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா். மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை உரிய அலுவலா்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

பின்னா், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 7 தட்டச்சா்களுக்குப் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் வி.ரமேஷ் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.