துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் சென்று தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவது என்பது கட்டாயம் . இந்த நிலையில் நடப்பாண்டிற்கான துறைத் தோ்வுகள் 14 -ஆம்தேதி தொடங்கி 21 ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் துறைத் தோ்வுகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களிலேயே நடத்தப்பட்டது. அதனால் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்க அவசியம் ஏற்படவில்லை.
நடப்பாண்டில் பள்ளி வேலை நாள்களில் துறைத் தோ்வுகள் நடைபெறுவதால் ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துத் துறை தோ்வுகளை எழுதச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துறைத் தோ்வு எழுத உள்ள ஆசிரியா்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் செல்லலாம் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை உடனடியாக வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

