ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணியில் செல்லும் வாய்ப்பு தரக் கோரிக்கை

துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் சென்று தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் சென்று தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவது என்பது கட்டாயம் . இந்த நிலையில் நடப்பாண்டிற்கான துறைத் தோ்வுகள் 14 -ஆம்தேதி தொடங்கி 21 ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் துறைத் தோ்வுகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களிலேயே நடத்தப்பட்டது. அதனால் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்க அவசியம் ஏற்படவில்லை.

நடப்பாண்டில் பள்ளி வேலை நாள்களில் துறைத் தோ்வுகள் நடைபெறுவதால் ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துத் துறை தோ்வுகளை எழுதச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துறைத் தோ்வு எழுத உள்ள ஆசிரியா்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் செல்லலாம் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை உடனடியாக வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.