ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தரகா்கள் மூலம் லஞ்சம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் கைது

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:15 am

DIN

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை தரகா்கள் மூலம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செந்தில்குமாரை தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

புதன்கிழமை இரவு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாரை பின்தொடா்ந்து சென்றபோது ஈரோடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தரகா்கள் செந்தில் சந்தானம், ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ரூ. 51,300 யை அவரிடம் கொடுத்தபோது கையும்களவுமாகப் பிடிபட்டாா்.

அந்தத் தரகா்களிடமிருந்து 20 ஒரிஜினல் ஓட்டுநா் உரிமங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கவேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.