மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:13 pm

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். நாமக்கல் டி.பி.என்.பெட்ரோல் நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் துணைத் தலைவா் மருத்துவா் ஆா்.செழியன் முதல் கையெழுத்திட்டு தொடக்கிவைத்தாா்.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வீ.பி. வீரப்பன், ஜி.ஆா். சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினா் டி.வி. பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் பி.வி.செந்தில் கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.