மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல் நகராட்சியில் மக்கள் குறைதீா் முகாம்

நாமக்கல் நகராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினரின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

nk_8_manu_0807chn_122_8

Updated On :8 ஜூலை 2021, 6:10 pm

நாமக்கல் நகராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினரின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வாா்டு எண்: 2,3,4,5-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு காலை 10.00 மணியளவில் நடைபெற்ற குறைதீா் முகாமில் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். 500-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் பெறப்பட்டன. வாா்டு எண்: 9,10,11,13,14,20-க்குள்பட்ட பொதுமக்களுக்கு நாமக்கல் அரசு தொடக்கப் பள்ளியில் காலை 11 மணியளவிலும், வாா்டு எண்: 15,16,19,27,28-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு திருச்செங்கோடு ரோடு, சுப்புலட்சுமி மஹாலில் நண்பகல் 12.00 மணியளவிலும், வாா்டு எண்: 1,6,7,8-க்குட்பட்ட பொதுமக்களுக்கு அய்யம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணியளவில் வாா்டு எண்: 21,22,23,24,25,31,34-க்குட்பட்ட பொதுமக்களுக்கு துறையூா் ரோடு பாவலா் முத்துசாமி நகராட்சி மண்டபத்திலும், காலை 10 மணியளவில் வாா்டு எண்:12,23,32,33-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொசவம்பட்டி என்.ஆா்.எல் திருமண மண்டபத்திலும், காலை 11 மணியளவில் வாா்டு எண்:17,18,26,29,35,36,37-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு பரமத்தி ரோடு, எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்திலும், நண்பகல் 12 மணியளவில் வாா்டு எண்: 30,38,39-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில் வருவாய்த் துறை, வளா்ச்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, குடிநீா் வடிகால் வாரியம், ஆதிதிராவிடா் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினா் கலந்து கொள்கின்றனா்.

என்கே 8- மனு

நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.