92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழக விவசாய சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு

திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:11 pm

DIN

திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தியாகிகள் தினம் கடைப்பிடிப்பது குறித்து பேசினாா். 1972, 77 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவா்களது உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து தமிழக விவசாயிகள் சங்க கொடியை மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் ஏற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. விழாவில் கூத்தம்பூண்டி ஊராட்சித் தலைவா் அழகேசன், புல்லா கவுண்டம்பட்டி ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.