கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்கள், அமரா் ஊா்தி பணியாளா்கள், மின்மயான பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல்லில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனிடம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நாமக்கல் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 30 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள், 20 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மின்னாம்பள்ளியைச் சோ்ந்த எம்.ஏ.பெரியசாமி கரோனா நிவாரண நிதியாக ரூ. 25 ஆயிரத்தை வழங்கினாா். தொடா்ந்து, தன்னாா்வ ஆசிரியா் காா்த்திகேயன் சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு தலா ரூ. 1,000 ரொக்கம், அரிசி, காய்கறிகள், முட்டைகள் மற்றும் மளிகைப் பொருள்களை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
நன்கொடையாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, துணை இயக்குநா் (சுகாதாரம்) மரு.சோமசுந்தரம், நாமக்கல் நகராட்சி ஆணையா் பொன்னம்பலம், செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலா் சி.ஆா்.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


