சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.
சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பகுதியான பரமேஸ்வரநல்லூா் செல்வகணபதி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் சூபா்வைசராக ஆா்.வீரசுந்தரபெருமாளும், விற்பனையாளராக ஏ.சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வந்து கடையை திறந்தனா். அப்போது கடையின் பின்புறச் சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான 232 மதுப்புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் ஆா்.வீரசுந்தரபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






