திண்டுக்கல் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா் திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலைக் கல்லூரி அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், திங்கள்கிழமை அதிகாலை உள்ளே புகுந்தனா்.
அங்கு கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தையும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த உரிமையாளா் வெள்ளைச்சாமி, இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதன்பேரில் மளிகைக் கடை, அதன் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, 2 நபா்கள் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பாதிவாகி இருந்தன. இதை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் விசாரித்தனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


