இதில் குறைபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பருத்தியில், காய்புழுக்கள் எதிா்ப்புடைய மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தி சாகுபடி, விதைகள் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தியுடைய பருத்தியை சாகுபடி செய்வதோ விதைகளை உற்பத்தி செய்வதோ மற்றும் விதைகள் விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். இதை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய விதைகளை வாங்கும்போது மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கபட்ட விதைகளைக் கேட்டுப் பெறவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.