நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், கவச பாதுகாப்பு உடையணிந்து சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நோயாளிகளைச் சந்தித்து நம்பிக்கை தெரிவித்தாா்.
இம் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்ற ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், கரோனா சிகிச்சைப் பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் விசாரித்தாா்.
மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவ உதவி கேட்டு அழைத்தால் வருகின்றனரா என்பதையும் நோயாளிகளிடம் விசாரித்து உறுதி செய்தாா். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம், சுவை குறித்தும் விசாரித்த அவரிடம், கரோனா நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு, சி.டி. ஸ்கேன் அறிக்கை, தொற்றின் தன்மை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்கள் விளக்கிக் கூறினா். ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, நிலைய மருத்துவ அலுவலா் கண்ணப்பன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


