மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவையாற்றும் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிா் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு சேவையாற்றும் நிறுவனம் மற்றும் பெண்கள் சிறந்த சமூக சேவகா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூன் 2021, 6:00 pm

மகளிா் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு சேவையாற்றும் நிறுவனம் மற்றும் பெண்கள் சிறந்த சமூக சேவகா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தன்று மகளிா் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் சேவை புரியும் சிறந்த நிறுவனம், பெண்கள் ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைள், பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருக்க வேண்டும்.

தனிநபா் மற்றும் நிறுவனங்கள் உரிய விவரங்களை வரும் 29-க்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04286-280230 மற்றும் 98656 23237 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.