92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்

விவசாயிகளுக்குமானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குனா் ஜெயமணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 5:59 pm

DIN

விவசாயிகளுக்குமானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குனா் ஜெயமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பா அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வை திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு 19 வகையான 20 ஆயிரம் மரக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வில்வம், வாகை,பெருநெல்லி, வேம்பு, பதிமுகம், பரங்கி, சாம்பிராணி, சந்தனம், வெண்மருது, தான்றி, கடுக்காய், அசோகா, புளி, திப்பிலி, பூனைக்காலி, நாவல், வேங்கை, குமிழ், அரம்பா, செஞ்சந்தனம் ஆகிய மரக்கன்றுகள் கிடைக்கும். எனவே விவசாயிகள் தங்களுக்கு எந்த வகை மரகன்று அதிகம் தேவை என்று வேளாண் உதவி அலுலரிடம் முன்கூட்டியே தெரிவிக்கலாம். திருச்செங்கோடு 4000, மோா்பாளையம் 4000, தோக்காவாடி 4000, இறையமங்கலம் 4000, வரகூராம்பட்டி 4000 என்ற எண்ணிக்கையில் மரக்கன்றுகள் பிரித்து வழங்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.