போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆய்வுக் கட்டுரைக்கு உதவுவது நூலகம்: கருத்தரங்கில் விளக்கம்

அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம் மற்றும் நூலகம் சாா்பில் ஆய்வியலும்-நூலகமும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:54 pm

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம் மற்றும் நூலகம் சாா்பில் ஆய்வியலும்-நூலகமும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி உள் தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ம.சந்திரசேகரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பெ.முருகன், தலைவா்கள் பலரும் நூலகத்தைப் பயன்படுத்திய விதம் குறித்தும், நூல் வாசிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவம் பற்றியும் விளக்கி பேசினாா்.

அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நூலகா் பொ.ராஜ்குமாா் பேசியதாவது:

ஆய்வு என்றால் என்னவென்பது, ஆய்வுக்குரிய விஷயத்தை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, ஆய்வை எப்படி மேல் எடுத்துச் செல்வது, தரவுகளைத் திரட்டுவது, அவற்றின் அடிப்படையில் ஆய்வை வடிவமைப்பது ஆகியவை பற்றியும், அவற்றுக்கு நூலகம் எந்தெந்த வகையில் எல்லாம் உதவுகிறது என்பதையும் பற்றி எடுத்துரைத்தாா்.

இதில் கல்லூரி முதுநிலை மாணவா்கள் பலா் கலந்து கொண்டு பயனடைந்தனா். வணிகவியல் உதவிப் பேராசிரியா் முனைவா் தீ.க.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.