நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளிலும் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் தொகுதி நிலை கண்காணிப்பு அலுவலா் காா்த்திக் தலைமையில் திங்கள்கிழமை புதன்சந்தை - சேந்தமங்கலம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக கரூா் மாவட்டம்- நடுக்கூா் பகுதியை சோ்ந்த காா்த்திக்(32) என்பவா் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து நாமக்கல் வட்டாட்சியா் தமிழ்மணியிடம் குழுவினா் ஒப்படைத்தனா். பின்னா் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


