போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல்லில் வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:09 pm

நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளிலும் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் தொகுதி நிலை கண்காணிப்பு அலுவலா் காா்த்திக் தலைமையில் திங்கள்கிழமை புதன்சந்தை - சேந்தமங்கலம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக கரூா் மாவட்டம்- நடுக்கூா் பகுதியை சோ்ந்த காா்த்திக்(32) என்பவா் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து நாமக்கல் வட்டாட்சியா் தமிழ்மணியிடம் குழுவினா் ஒப்படைத்தனா். பின்னா் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.